ரஞ்சித் 2002 இல் சன் டிவியின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் தனது மெய்சிலிர்க்க வைக்கும் பாடும் திறமையால் இறுதிச்சுற்றிற்குச் சென்று, வெற்றியாளராக வெளிப்பட்ட பிறகு, பின்னணிப் பாடகராக தனது பயணத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
ரஞ்சித் ஒரு பயிற்சி பெற்ற கர்நாடக பாடகர். PS நாராயண சுவாமி, வித்வான் ஸ்ரீ கடலூர் சுப்பிரமணியம், ஸ்ரீ KS கனகசிங்கம் மற்றும் ஸ்ரீ திருச்சூர்.பி ராமன்குட்டி போன்ற புகழ்பெற்ற இசைக் குருக்களின் வழிகாட்டுதலுடன் அவர் தனக்கென ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொண்டார். அவரது இசைப் பாணியானது ராக், கிளாசிக்கல், RnB,அல்ட்டர்நேட்டிவ் ராக், ஹிப்-ஹாப், நாட்டுப்புறப் பாட்டு & EDM ஆகியவற்றைத் தழுவியிருக்கும்
